• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேசிபி இன்ப்ரா நிறுவனம் சார்பில் 5 மாநிலங்களில் உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப் பயிற்சி

December 4, 2022 தண்டோரா குழு

முன்னணி உள்கட்டமைப்பு நிறுவனமான கேசிபி இன்பரா நடப்பு நிதியாண்டில் 1500 கோடி ரூபாய்க்கு (டர்ன்ஓவர்) வருவாய் ஈட்டிள்ளது. மேலும் பான் இந்தியா அடிப்படையில் வரும் ஆண்டில் பல்வேறு திட்டப் பணிகளில் 5000 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட திட்டமிப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் சாலைகள்,பாலங்கள்,ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள்,பைப்லைன்,மின்சாரம், ஆற்றல் சேமிப்பு திட்டங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங்,திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்று வருகிறது.

தமிழ்நாடு,தெலுங்கானா,ஆந்திரப் பிரதேசம் , கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஸ்பெஷல் கிளாஸ் ஒப்பந்த நிறுவனமாக கேசிபி நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.உள்கட்டமைப்புத் துறையானது தொழில்துறைக்கு 70% க்கும் அதிகமான வருவாயை வழங்குகிறது. உள்கட்டமைப்புத் துறை அதிக வருவாயை அளித்தாலும், அதில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பற்றி சிவில் இன்ஜினியர்களில் பெரும்பாலானவர்கள் தெரிந்து கொள்ள வில்லை.

கேசிபி இன்ப்ரா நிறுவனம், பொறியியல் பட்டதாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உள்கட்டமைப்புத் துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

உள்கட்டமைப்புத் துறையில் திறமையான நபர்களை உருவாக்குவதும், உள்கட்டமைப்புத் துறையில் வளரும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதும் இந்தப் பயிற்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.தொழில்துறை தரத்தின்படி உதவித்தொகையுடன் உள்கட்டமைப்புத் துறையில் வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகளில் நடைமுறைப் பயிற்சி வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் கேசிபி இன்ப்ரா மூலமாக இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்றனர்.
பயிற்சி முடித்த பலர் உள்கட்டமைப்புத் துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, 2022 ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் 300 பொறியியல் பட்டதாரிகளை பான் இந்தியா அடிப்படையில் இன்டர்ன்ஷிப் பயிற்சியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கேசிபி இன்ப்ரா திட்ட தளங்களில் பயிற்சி வழங்கப்படும். இன்ஜினியரிங் பட்டதாரிகள் தொழில் முனைவோர்களாக மாற இது நல்ல வாய்ப்பாக அமையும்.பயிற்சி பெற விரும்புவோர் [email protected],[email protected] என்ற இமெயில்களுக்கு விவரங்கள் அனுப்பலாம்.

மேலும் படிக்க