• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அடி வெளுத்து வாங்கிய அப்ரிதி: 42 பந்தில் சதம் விளாசி அசத்தல்!

August 23, 2017

இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி-20 பிளாஸ்ட் முதல் காலிறுதியில் ஹாம்ஷியர் வீரர் அப்ரிதி 42 பந்தில் சதம் விளாசினார்.

இங்கிலாந்தில் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடாரான நாட்வெஸ்ட் டி-20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் பெர்பியில் நடந்த முதல் காலிறுதி போட்டியில் ஹாம்ஷியர், டெர்பிஷியர் அணிகள் மோதின.

இதில் முதலில் ’டாஸ்’ வென்ற டெர்பிஷியர் அணி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹாம்ஷியர் அணிக்கு துவக்க வீரர் அப்ரிதி அதிரடியாக சதம் விளாசி (101 ரன்கள், 10 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் வின்சி (55 ரன்கள்) அரைசதம் கைகொடுக்க, அந்த அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 249 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய டெர்பிஷியர் அணி, 19.5 ஓவரில், 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஹாம்ஷியர் அணி 101 ரன்கள் வித்தியாசத்தல் வெற்றி பெற்றது. டெர்பிஷியர் அணிக்கு எதிராக சதம் விளாசிய ஹாம்ஷியர் வீரர் அப்ரிதி, டி-20 அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

மேலும் படிக்க