• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெற்றது இந்தியா!

March 27, 2017 tamil.samayam.com

தர்மசாலா : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா, சஹாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸியை விட முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. 3 போட்டிகள் முடிவில் இந்தியா – ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

4வது போட்டி தர்மசாலாவில் நடைப்பெற்று வருகின்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடி வரும் இந்தியாவுக்கு ராகுல் 60, புஜாரா 57, ரஹானே 46,அஸ்வின் 30 ரன்கள் எடுத்து இந்தியாவை வலுப்பெற செய்தனர்.

இந்நிலையில் களமிறங்கிய ஜடேஜா, சஹா சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து இந்தியாவை முன்னிலை பெறச்செய்தனர்.

ஜடேஜா அரைசதம் கடந்து 63 ரன்களும், சஹா 31 ரன்களும் எடுத்து கும்மின்ஸ் பந்தில் அவுட்டாகி வெளியேறினர்.

மேலும் படிக்க