June 20, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி தனது முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாவது போட்டியில் இன்று விளையாடி வருகிறது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.இங்கிலாந்து அணி தொடக்க முதலே அதிரடியாக விளையாடியது.இதனால் 50 ஓவர் முடிவுகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 481 ரன்கள் எடுத்தது.இந்த அணியில் அதிகபட்சமாக ராய் 82 ரன்களும்,பேரிஸ்டோ 139 ரன்களும்,ஹேல்ஸ் 147 ரன்களும்,மோர்கன் 67 ரன்களும் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 39 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது.
இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 444 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்து வந்தது.இதன் மூலம் தன்னுடைய முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.