June 18, 2018
tamilsamayam.com
இங்கிலாந்து போர்டு லெவன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி,அசத்தல் வெற்றி பெற்றது.
இந்திய ஏ அணி,இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.இங்கிலாந்தில் போர்டு லெவன்,இந்திய ஏ அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி,லீட்ஸில் நடந்தது.இதில் டாஸ் வென்ற போர்டு லெவன் அணி,முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு,பிருத்வி ஷா (70),கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் (54), இஷான் கிஷான் (50),ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 328 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து போர்டு லெவன் அணி,36.5 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதையடுத்து இந்திய ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.