• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தோனேஷியாவில் பறந்த இந்தியக் கொடி

April 17, 2017 tamilsamayam.com

இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் கிராண்ட் ப்ரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் மூவர் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்தோனேஷியா நாட்டின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான, சர்வதேச ஜூனியர் கிராண்ட் ப்ரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனைகள் மூன்று பேர் ஒரே நாளில் பதக்கம் வென்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில், ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளராக இருந்த கோபிசந்தின் மகள் காயத்ரி கோபிசந்த் மற்றொரு இந்திய வீராங்கனையான சாமியா இமாதை எதிர்த்து ஆடினார். 56 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-11, 18-21, 21-16 என காய்த்ரி கோபிசந்த் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் எதிர் எதிராக மோதிய, சாமியா – காயத்ரி ஆகியோர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இணைந்து ஆடி சாம்பியன் பட்டத்தை வென்றனர். அவர்கள் இந்தோனேஷிய வீராங்கனைகள் கெல்லி – ஷிலாண்ட்ரி இணையை வீழ்த்தி தங்கத்தை தமதாக்கினர்.

இது மட்டுமின்றி, இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியாவின் கவிப்ரியா – மேகனா ரெட்டி இணை வென்றது.

இதன் மூலம் ஒரே நாளில் இந்தியாவின் இளம் வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை பறைசாற்றியுள்ளனர்.

இன்று நடைபெற்ற சிங்கப்பூர் ஓபன் ஆடவர் ஒன்றையர் பிரிவு இறுதி ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி – சாய் ப்ரனீத் ஆகியோர் மோதினர். இதில், சாய் ப்ரனீ வெற்றி பெற்று முதல் முறையாக சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

மேலும் படிக்க