• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுகிறார் தோனி? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

July 3, 2019 தண்டோரா குழு

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்திய அணிக்காக உலகக்கோப்பை உள்ளிட்ட பல்வேறு கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் தோனியின் ஆட்டம் பேசும்படியாக இல்லை என அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெரும் முடிவை தோனி அறிவிக்க உள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தோனி ஏற்கனவே கிரிக்கெட் வாரியத்திடம் பேசிவிட்டதாகவும், இந்த உலகக்கோப்பை முடிந்த பின்னர் விரைவில் அவர் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோனி குறித்த இந்த புதிய தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க