April 1, 2017
tamil.samayam.com
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் நல்ல செய்தியாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாட முழு உடற்தகுதி பெற்றதாக அந்த அணி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் டி-20 தொடரான ஐ.பி.எல்., தொடர், இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 5ல் துவங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் வாரத்தில் நடக்கும் போட்டிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இவரைப்போலவே இவரது அணியின், ராகுல், டிவிலியர்ஸ், பின் புனே அணியின் அஷ்வின், தொடர்ந்து முரளி விஜய் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்ததடுத்து வீரர்களின் விலகல் செய்தி வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், முதல் முறையாக ஐ.பி.எல்., சார்பாக ஒரு ஆறுதலான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீண்ட நாட்களாக காயம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த சீனியர் வீரர் ரோகித் சர்மா, அந்த அணியின் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விளையாட முழூஉடற்தகுதியுடன் உள்ளதாக ஐ.பி.எல்.,நிர்வாகம் தெரிவித்துள்ளது.