• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கால்பந்து வீரர் மெஸ்ஸி மீதான தடை விலகியது

May 6, 2017 tamilsamayam.com

சூரிச் (சுவிட்சர்லாந்து): கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர நாயகன் மெஸ்ஸி, சூப்பர் ஸ்டார் டீகோ மரடோனா விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வந்தவர் என புகழப்படுபவர். சில சமயங்களில் மரடோனாவை விட மெஸ்ஸி சிறந்த ஆட்டக்காரர் எனவும் அவர் புகழப்படுவதுண்டு.

இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற மெஸ்ஸி கடந்த மாதம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதி சுற்றில் சிலி அணியை எதிர்த்து விளையாடினார். அப்போது நடுவர் எமர்சன் அகஸ்டோவை அவமதிக்கும் வகையில் மெஸ்ஸி பேசியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பிஃபா அமைப்பு மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மெஸ்ஸியின் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி நான்கு போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க