சச்சின் டெண்டுல்கர், ஆலன் டொனால்ட், கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு ICC ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய சச்சின்,
இந்த சந்தர்ப்பத்தில், ஒரு நீண்ட சர்வதேச வாழ்க்கையில் எனது பக்கத்திலிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது பெற்றோர், சகோதரர் அஜித் மற்றும் மனைவி அஞ்சலி ஆகியோர் எனக்கு தூண்களாக இருந்தனர். அதே நேரத்தில் பயிற்சியாளர் ராமகாந்த் அக்ரேக்கர் போன்ற ஒருவரை சிறந்த ஆரம்ப வழிகாட்டியாக நான் பெற்றேன். ICC கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்படுவது ஒரு மரியாதை, இது தலைமுறை தலைமுறையாக கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பை மதிக்கிறது. அவர்கள் அனைவரும் விளையாட்டின் வளர்ச்சிக்கும் பிரபலத்திற்கும் பங்களித்திருக்கிறார்கள். நான் எனது முயற்சியைச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்என டெண்டுல்கர் கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்
திருப்பூரில் மேம்பட்ட வசதிகளுடன் பெரிய, நவீன மருத்துவமனையை திறந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை
3வது இந்தியா ஐடிஎம்இ விருதுகள் 2025: விருதை வெல்ல ஜவுளி துறையினர் விண்ணப்பிக்க அழைப்பு
கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில், அதிநவீன அம்பிலியோபியா மற்றும் இருவிழி பார்வை மையம் துவக்கம்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை எண்டோஸ்கோபி மூலம் உலகின் 3வது பெரிய மற்றும் இந்தியாவின் மிக பெரும் பாலிப் கட்டியை அகற்றி சாதனை!
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்