• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சரியானா கண்டிப்பா சாதிப்பேன்: சானியா மிர்சா!

February 16, 2018 tamilsamayam.com

சரியான நேரத்தில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தால், நிச்சயமாக ஆசிய போட்டியில் பதக்கம் வெல்வேன் என இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேபாங்கில் நடக்கிறது. ஆசிய போட்டிகளின் வரலாற்றிலேயே இரண்டு நகரங்கள் இணைந்து போட்டிகளை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் கடந்த 2006 முதல் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் ஒரு பதக்கமாவது பெற்று பெருமை சேர்ப்பவர், இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

ஆனால், கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் உள்ளார். இந்நிலையில் சரியான நேரத்தில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தால், ஆசிய போட்டிகளில் நிச்சயமாக பதக்கம் வென்று சாதிப்பேன் என சானியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில்,

“இன்னும் சரியாக இரண்டு மாதங்களில் மீண்டும் டென்னிஸ் களத்துக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஒவ்வொரு முறை ஆசிய போட்டிகளுக்கு சென்ற போதும் கண்டிப்பாக பதக்கத்துடன் திரும்பியுள்ளேன். அதேபோல இம்முறையும் செல்ல முடிந்தால், கண்டிப்பாக பதக்கத்துடன் திரும்புவேன்.” என்றார்.

மேலும் படிக்க