• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிஎன்பிஎல் இன்று ஆரம்பம்! தொடங்கி வைக்க தோனி ரெடி!

July 22, 2017 tamil.samayam.com

இரண்டாவது தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.

லோக்கல் ஐபிஎல் என்று செல்லமாக அழைக்கப்படும் டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமியர் லீக்) கிரிக்கெட் தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது. இரண்டாவது ஆண்டாக இன்று தொடங்கும் இத்தொடர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடக்கும்.

இத்தொடரில், தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, திருவள்ளூர், திருச்சி, மதுரை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதில் அதிக புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் ‘பிளே ஆப்’ முன்னேறும்.

முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும். இப்போட்டி, ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கும். இதில், வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு உறுதியாகும்.

அடுத்து நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த அணிகள் விளையாடும். ஆகஸ்ட் 16ஆம் தேதி நடக்கும் இப்போட்டியில் வெல்லும் அணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோற்ற அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். எலிமினேட்டர் ஆட்டத்தில் தோற்கும் அணி தொடரில் வெளியேற்றப்படும்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வெல்லும் அணி முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும்.

இத்தொடரின் தொடக்க நாளான இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சிக்ஸ் அடிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் மகேந்திர சிங் தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் தூத்துக்குடி அணி சேப்பாக்கம் அணியை 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க