• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிவிலியர்சால் வாழ்நாளில் மறக்க முடியாத ‘6’!

June 13, 2017 tamilsamayam.com

தென் ஆப்ரிக்காவுக்க கேப்டன் டிவிலியர்சுக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மிகவும் மறக்க முடியாத வகையில் அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

லண்டனில் நடந்த மிக முக்கியமான 11வது லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் 76 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த தென் ஆப்ரிக்கா, தவறுகளால், 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுலப இலக்கை எளிதாக துரத்திய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி, தொடரில் இருந்து வெளியேறியது. இந்த சோகத்துடன் சேர்த்து, அந்த அணி கேப்டன் டிவிலியர்சுக்கு தனது வாழ்நாளில் மறக்க முடியாத தொடராகவும் அமைந்தது. இத்தொடரில் 3 போட்டிகளில் பங்கேற்றுள்ள டிவிலியர்ஸ் மொத்தமாக 20 ரன்கள் (16,0,4) மட்டுமே எடுத்துள்ளார்.

மேலும் படிக்க