• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தந்தையானார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா

December 31, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மா. ஐபிஎலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்து வருகிறார். ரோகித் – ரித்திக்கா தம்பதியருக்கு கடந்த டிசம்பர் 13, 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. சமீபத்தில் தனது மனைவி கருவுற்று இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். ரோகித்சர்மா தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ரோகித் ஷர்மாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்து ரித்திக்கா ஞாயிறு அன்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தந்தையான மகிழ்ச்சியை கேட்ட ரோகித்சர்மா உற்சாகத்தில் மிதந்தார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால் ரோகித்சர்மா இந்தியாவுக்கு புறப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க