April 19, 2018
tamilsamaym.com
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது.இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.
இதில் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல்., தொடரின் 15வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 9 தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இப்போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானேவை,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்,ஸ்டெம்பிங் முறையில் வெளியேற்றினார்.
சில வினாடிகள் கிடைத்த ‘ஸ்டெம்பிங்’ வாய்ப்பை தினேஷ் கார்த்திக், கச்சிதமாக மின்னல் வேகத்தில் பயன்படுத்தி ரகானேவை அவுட்டாக்கினார்.இவரது இந்த ஸ்டெம்பிங்,முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மின்னல் வேக செயல்பாட்டை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது.