March 28, 2017
tamil.samayam.com
‘கடைசி டெஸ்டில் தோற்ற பின் இருந்து விருந்து சாப்பிட்டு போங்க’ என ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ வேட் இடம் இந்திய ‘ராக் ஸ்டார்’ ரவிந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.
இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடக்கிறது. இப்போட்டியில், இந்திய அணி க்கு வெற்றி வாய்ப்பு பிராகசமாக உள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ வேடை, இந்திய ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா கடுப்படித்துள்ளார்.
இதுகுறித்து ஜடேஜா கூறுகையில்,’ போட்டி போட்டியாக இருந்தாலும், போட்டிகள் முடிந்த பின் ஆஸ்திரேலிய வீரர்களை இருந்து விருந்து சாப்பிட்டு செல்ல வேண்டும் என மாத்யூ வேட் இடம் தெரிவித்தேன். இது போன்ற நடைமுறைகள் தான், என்னுடைய மேன் ஆப் தி மேட்ச், மேன் ஆப் தி சீரிஸ் விருதுகளை விட பெரிதாக கருதுகிறேன்,’ என்றார்.