• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ளே ராஜினாமா

June 20, 2017 தண்டோரா குழு

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி எதிரொலியாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த வருடம் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே நியமிக்கப்பட்டார்.ஓராண்டிற்கு மட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்ட அவரது பதவி காலம் கடந்த மாதமே நிறைவடைந்தது.

இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கும்ளேவே பயிற்சியாளராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் படுதோல்வி அடைந்தது.இந்த தோல்வியின் எதிரொலி பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே இன்று திடீரேனே ராஜினாமா செய்தார்.

கேப்டன் விராத் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ளேவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க