• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல்கேரிய ஓபன்: பட்டம் வென்று அசத்திய குட்டிப் பையன் லக்சயா

August 19, 2017 tamilsamayam.com

பல்கேரிய ஓபன் பேட்மின்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இளம் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

பல்கேரிய நாட்டில் உள்ள சோபியா நகரில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் இலங்கையின் டினுகா கருணாரத்னாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

புதன்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் கோப்பை வெல்லும் உறுதியுடன் களமிறங்கிய லக்சயா சென், குரோஷியாவின் ஜோனிமிர் டர்கின்ஜாக்கை எதிர்த்து விளையாடினார்.

இப்போட்டியில் முதல் செட்டை 18–21 என போராடி தவறவிட்ட லக்சயா சென் அடுத்தடுத்த செட்களில் உத்வேகத்துடன் விளையாடினார். 2வது செட்டை 21–12 எனக் எளிதாக கைப்பற்றிய அவர், 3வது செட்டையும் 21–17 என வென்று ரசிகர்களை அசத்தினார்.

இவ்வாறு 18–21, 21–12, 21–17 என்ற கணக்கில் ஜோனிமிரை வீழ்த்திய லக்சயா சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.

மேலும் படிக்க