June 5, 2017
tamil.samayam.com
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான விளையாட்டை பார்த்த பின் பாகிஸ்தான் அணி மேல் வைத்திருந்த நம்பிக்கையே போய்விட்டது என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ஜூன் 1-18ம் தேதி வரை நடைப்பெற்று வருகின்றது. இதில் நேற்று இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டு துவம்சம் செய்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை பார்த்த சையத் அப்ரிடி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து பேசினார்.
பாகிஸ்தானை விளாசிய அப்ரிடி:
இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தானின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது. பவுலிங், பீல்டின், பேட்டிங் என அனைத்திலும் சொதப்பலாக செயல்பட்டது.
போட்டிக்கு முதல்நாள் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஜ் அகமது கேம் பிளான் எல்லாம் கொண்டு வந்தார். ஆனால் களத்தில் இறங்கிய பின் அவர்களின் செயல்பாடு மிக மோசமாக இருந்தது.
ரோகித் – தவான்:
இந்தியாவின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா – சிகர் தவான் மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கோலி, யுவராஜ் சிங் ஆட்டம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் நின்று விளையாட இடக் கொடுத்தால் , இந்திய அணியின் ரன் வேட்டையை தடுக்க முடியாது என்பதை பாகிஸ்தான் அணி உணர மறுத்து விட்டது.
பவுலிங், பேட்டிங் மோசம்:
பாகிஸ்தானின் பவுலிங் தான் மோசமாக இருந்தது என்று பார்த்தால், பீல்டிங்கும் படுசொதப்பலாக இருந்தது. பல கேட்சுகள் நழுவவிட்டது. பாகிஸ்தானின் மிகப்பெரிய தவறு.
பேட்டிங் பொறுத்தவரை தேவையில்லாத ஷாட்கள் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தது தவறு என பாகிஸ்தான் அணியை கிழி,கிழி என கிழித்துள்ளார் அப்ரிடி.