• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 15 பேர் மத்தியப் பிரதேசத்தில் கைது

June 21, 2017 tamilsamayam.com

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் பட்டம் வென்றதை கொண்டாடிய 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், இறுதிப்போட்டியில் மோதின. லண்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி, எதிர்பாராவிதமாக, அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பர்ஹான்புர் மாவட்டத்தில் மொகாத் என்ற இடத்தில், சில இளைஞர்கள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கோஷமிட்டும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடியுள்ளனர். இதுபற்றி உள்ளூர் மக்கள் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் 15 இளைஞர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க