• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூரை புரட்டி எடுத்த தமிழ் தலைவாஸ் வெற்றி

August 11, 2017 tamilsamayam.com

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது.

நாக்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூர் புல்ஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 12-8 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் பெற்றது.

மிகவும் சவாலாக அமைந்த இரண்டாவது பாதியில் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணி 29-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. தமிழக தலைவாஸ் அணியில் சேலத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

முந்தைய போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி – புனேரி பல்டன்ஸ் அணியை தோற்கடித்தது.

மேலும் படிக்க