• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்றாவது டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி சிறப்பான ஆட்டம் !

December 26, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில், டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இருஅணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் முரளிவிஜய் மற்றும் கே.எல் ராகுலுக்கு பதில் ஹனுமா விஹாரியும், மயங் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். மயங் அகர்வால் நிதானமாக விளையாட, மறுபுறம் ஹனுமா விஹாரி சிறிது பதற்றத்துடன் விளையாடினார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய 19-வது ஓவரில், 2-வது ஸ்லிப்பில் இருந்த பிஞ்ச் இடம் கேட்ச் கொடுத்து விஹாரி (8) ஆட்டமிழந்தார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அரைசதம் அடித்து மயங் அகர்வால் 76 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடி இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்த்தினர். இதையடுத்து, முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி 47 ரன்களுடனும், புஜாரா 68 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க