• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம் – கேரள உயர் நீதிமன்றம்

August 7, 2017 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்ஸ்ரீசாந்த் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தஸ்ரீசாந்த் தமக்கு எதிராக டெல்லி போலீஸ் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடை விதித்தாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த வழக்கில், பி.சி.சி.ஐ.க்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க