• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

12வது ஐபிஎல் போட்டி எங்கு நடைபெறுகிறது? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

January 8, 2019 தண்டோரா குழு

ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய இந்தியன் பிரீமியர் லிக் எனப்படும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்த நிலையில், போட்டி எங்கே நடக்கும், எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. பொதுத்தேர்தல் காரணமாக 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. அதைபோல் இந்த வருடமும் தேர்தலால் ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது அதில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றதாகவும், மார்ச் 23 ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பாதுகுப்பு முகமைகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க