March 28, 2018
தண்டோரா குழு
2018 ஐபிஎல் போட்டிகளில் வார்னர் மற்றும் ஸ்மித் விளையாட அனுமதியில்லை என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, கேப்டவுனில் 3வது டெஸ்ட் போட்டியில்ஆஸ்திரேலிய அணி322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஃபேன் கிராஃப்ட் மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பான வீடியோ பதிவுகளும் கிடைத்த நிலையில், தனது தவறை ஒப்புக் கொள்வதாக ஃபேன் கிராஃப்ட் தெரிவித்தார். பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னரும் பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ஐபிஎலில். ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதாராபாத் அணிகளின் கேப்டன் பொறுப்பில் வார்னர் மற்றும் ஸ்மித் நீக்கப்பட்டனர். இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளிலும் வார்னர் ஸ்மித் விளையாட அனுமதியில்லை என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.