• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்த வருஷம் இவங்க தான் சாம்பியன்: டிவிலியர்ஸ்!

May 3, 2017 tamilsamayam.com

இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் 40 லீக் போட்டிகள் முடிந்து விட்ட நிலையில், சில லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இத்தொடரில் இருந்து ஸ்டார் வீரர்களை கொண்ட பெங்களூரு அணி, முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த அணியின் 360 டிகிரி வீரரான டிவிலியர்ஸ், இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் அணியை கணித்துள்ளார். தவிர, இத்தொடரில் இருந்து வெளியேறியது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிலியர்ஸ் கூறுகையில்,

எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் எங்கள் அணியால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. ஆனால் இந்த தோல்விகளில் இருந்து பல தேவையான பாடங்களை கற்றுக்கொண்டோம். இனி எதையும் மாற்ற முடியாது. எஞ்சியுள்ள போட்டிகளை வெற்றியுடன் முடிக்க முயற்சிப்போம். தற்போது பங்கேற்கும் அணிகளில், மும்பை அணி, சமபலத்துடன் காணப்படுகிறது. அவர்கள் இந்த ஆண்டு கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். என்றார்.

மேலும் படிக்க