• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய கோப்பை கிரிக்கெட்:இந்தியா-பாகிஸ்தான் நாளை மீண்டும் மோதல்

September 22, 2018 தண்டோரா குழு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் மோதுகிறது.

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15–ந் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றது.இதில் நடப்பு சாம்பியன் இந்தியா,இலங்கை பாகிஸ்தான்,வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்துக் கொண்டுள்ளது.

இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில்,சூப்பர் 4 போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது.இதில் இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றன.முதல் போட்டியில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதின.இதில்,இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இதில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை போராடி வென்றது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.ஏற்கனவே நடந்த ‘லீக்‘ ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க