• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசியக் கோப்பை: இலங்கையை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

September 18, 2018 தண்டோரா குழு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறக்கிய முகமது ஷேசாத் மற்றும் ஜனத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதை தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி,ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.இதனால் இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இலங்கை அணியில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 36 ரன்களும்,திசாரா பெராரா 28 ரன்களையும் எடுத்திருந்தனர்.இதைத்தொடர்ந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபரா வெற்றி பெற்றது.இந்த தோல்வி மூலம் ஆசிய கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியது.

மேலும் படிக்க