• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய கோப்பை: இந்திய அணி வீரர்கள் 3 பேர் விலகல் !

September 20, 2018 தண்டோரா குழு

ஆசிய கோப்பைக்கான போட்டித் தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15–ந் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றது.இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை,வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்துக் கொண்டுள்ளது.இத்தொடரில் நேற்று இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது 18-வது ஓவரை வீசிய இந்தியாவின் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால்,பெவிலியன் திரும்பினார்.அத்துடன்,அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.அதைபோல்,ஷர்துல் தாகூர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து,இந்த மூவரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விலகியுள்ளனர். வர்களுக்கு பதிலாக தீபர் சாஹர்,ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க