• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2016-ம் ஆண்டுக்கான பிஃபா சிறந்த வீரர் விருதை வென்றார் கிறிஸ்டியனோ ரொனால்டோ!

January 10, 2017 tamil.samayam.com

பிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை 4வது முறையாக, கிறிஸ்டியனோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ, ரியல் மேட்ரிட் கால்பந்து அணிக்காக, கிளப் போட்டிகளிலும் விளையாடிவருகிறார். அவர் சர்வதேச கால்பந்து அரங்கில் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். இதன்படி, 2016ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு, ரொனால்டோ பெயரை சர்வதேச கால்பந்து சம்மேளனம் தேர்வு செய்தது.

இதற்கான விருதை நேற்று அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதுக்கான போட்டியில், மற்றொரு சர்வதேச கால்பந்து வீரரான மெஸ்ஸி, சில வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியதும் குறிப்பிடத்தக்கது.

பிஃபா சிறந்த வீரர் விருதை 4வது முறையாக ரொனால்டோ பெற்றுள்ளார். அதேசமயம், அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி 5முறை இந்த விருதை பெற்று, சாதனை படைத்துள்ளார். அவரை விரைவில் எட்டிப்பிடிப்பேன் என்று, ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க