October 12, 2017
tamilsamayam.com
இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 சிக்சர்கள் அடிக்கவில்லை என்றால் மக்கள் எப்பவோ என்னை மறந்திருப்பார்கள்’ என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இந்திய அணி, கடந்த 2011ல் உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இதன் பின் கேன்சரால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டார்.
தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பெற கடினமாக போராடி வருகிறார். தவிர, கேன்சர் விழிப்புணர்வு முகாமை அமைத்து மக்களுக்கு கேன்சர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2007ல் செப்டம்பர் மாதம் 19ம் தேதி இங்கிலாந்து எதிரான போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்தார்.
இதுகுறித்து தற்போது பேசிய யுவராஜ்சிங்,
“அது என்னுடைய நாள். அதனால் அதை தவர விடக்கூடாது என நினைத்த%