August 10, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.
இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்குவதாக இருந்தது. ஆனால் காலை போட்டி நடைப்பெற இருந்த லண்டன்,லார்ட்ஸ் மைதானம் பகுதியில் காலை முதல் மழை பெய்து வந்தது.இதன் காரணமாக நடுவர்கள் முதல் நாள் போட்டியை கைவிடப்படுவதாக அறிவித்தனர்.
மேலும்,முதல் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர்,லார்ட்ஸ் மைதானத்தின் பாரம்பரிய முறைப்படி 5 நிமிடம் மணியடித்து துவங்கி வைக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.