August 10, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்து- இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளான இன்று மீண்டும் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது.ஆனால் காலை போட்டி நடைப்பெற இருந்த லண்டன்,லார்ட்ஸ் மைதானம் பகுதியில் காலை முதல் மழை பெய்து வந்தது.இதன் காரணமாக நடுவர்கள் முதல் நாள் போட்டியை கைவிடப்படுவதாக அறிவித்தனர்.இதையடுத்து,இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து,தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களம் இறங்கினர்.முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் முரளி விஜய்(0) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார்.
பின்னர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஏழாவது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.இதற்கிடையில்,6.3 ஓவர் வீசப்பட்ட நிலையில்,மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.தற்போதய நிலவரப்படி இந்திய அணி 6.3 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது.