August 23, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணியிலிருந்து முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வென்று 2-0 என முன்னிலை வகிக்கின்றது.இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில்முரளி விஜய்,குல்தீப் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு பிரிதிவ் ஷாவும்,விஹரியும் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.