• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொடரை வென்றது இந்திய அணி !

November 1, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் விண்டீஸ் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னலையில் உள்ளது.ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.இந்நிலையில்,தொடரில் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று கேரள திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில்,டாஸ் வென்ற வெஸ்ட் விண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் விண்டீஸ் அணி 104 ரன்னில் சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 4 நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பும்ரா,கலீல் அஹ்மது தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதையடுத்து,105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.துவக்க வீரராகாக களமிறங்கிய ஷிகார் தவான் 6 ரன்னில் அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினர்.இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ரோஹித் சர்மா 63 ரன்களும்,கோலி 33 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தார்.இதன் மூலம் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

மேலும் படிக்க