• Download mobile app
11 Apr 2025, FridayEdition - 3348
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ்: காலிறுதியில் ஜோஸ்னா சின்னப்பா!

April 11, 2017 tamilsamayam.com

எல் கவுனாவில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா முன்னேறினார்.

எகிப்தின் எல் கவுனாவில் உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, 9வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஆலிசன் வாட்டர்ஸை சந்தித்தார்.

இதன் முதல் செட்டை 11-5 என வென்ற ஜோஸ்னா, அடுத்த இரண்டு செட்டையும் 7-11, 9-11 என கோட்டைவிட்டார். பின் எழுச்சி கண்ட ஜோஸ்னா அடுத்த இரண்டு செட்களையும், 11-8, 11-9 என தன்வசப்படுத்தினார்.

முடிவில், இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, இங்கிலாந்தின் ஆலிசன் வாட்டர்ஸை 11-5, 7-11, 9-11, 11-8, 11-9 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மேலும் படிக்க