March 24, 2017
tamilsamayam.com
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய இளம் வீரர் ரென்ஷா சுமார் 119 ஆண்டு சாதனையை தகர்த்தார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது. இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் துவங்குகிறது.
இத்தொடர் முழுதும் அனல் பறக்கும் நேரத்தில், முதல் டெஸ்டின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் மேட் ரென்ஷா, களத்தில் இருந்து திடீரென காணாமல் போனார். பின் தான் அவருக்கு வயிற்றுக்கோளாறு என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 119 ஆண்டு சாதனையை சர்வசாதரணமாக தகர்த்துள்ளார் ரென்ஷா.
ஆஸ்திரேலிய அணிக்காக 21 வயதுக்கு முன் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமை பெற்றார். 20 வயதான ரென்ஷா, இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்டில் பங்கேற்று 538 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன் கடந்த 21 வயதுக்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக 1890ல் கிளம் ஹில் 482 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இவருக்கு அடுத்து கிரிக்கெட் களத்தில் மறைந்த பில் ஹியூஸ் (472 ரன்கள்), டெஸ்ட் உலகின் மன்னனான டான் பிராட்மேன் (468 ரன்கள்) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.