• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அடுத்த டெஸ்டில் அதிரடி மாற்றம்…. பண்ட், பும்ராவுக்கு வாய்ப்பு!

August 15, 2018 tamilsamayam.com

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ரிஷப் பண்ட்,பும்ரா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,3 டி-20,3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது.ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.இதில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.இதன் மூலம் கேப்டனாக கோலி படு மோசமான தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் கேப்டன் கோலி,பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் அதிகாரத்துக்கு ஆப்பு வைக்க பிசிசிஐ., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இதையடுத்து கோலியின் பிசிசிஐ.,யின் உத்தரவின் பேரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என தெரிகிறது.

சர்வதேச அனுபவ அடிப்படையில் வாய்ப்பு கிடைத்த போதும்,அதை தினேஷ் கார்த்திக் சரியாக பயன்படுத்தவில்லை.இதனால் இவருக்கு பதிலாக இளம் பண்ட் அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.அதே போல,இளம் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால்,அவரும் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என தெரிகிறது.இதை உறுதி செய்யும் விதத்தில் இவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க