August 13, 2018
தண்டோரா குழு
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடரில் மதுரை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது.இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது.இதில்,திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதியது.
இதில்,டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து, முதலில் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 117 ரன்கள் எடுத்தது.இதில்,கேப்டன் ஜெகதீசன் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் (51ரன்கள்) எடுத்தார்.
பின்னர் களமிறக்கிய மதுரை அணி 17.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக டிஎன்பிஎல் தொடரை கைப்பற்றியுள்ளது.