February 3, 2017
tamilsamayam.com
முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியை, அதிரடி மன்னன் சேவக் டுவிட்டரில் சீண்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், எல்லா வீரர்களும் குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குவது. சுற்றுலா செல்வது என ஹாயாக ஓய்வு எடுப்பது வழக்கம்.
ஆனால், சேவக் ஓய்வுக்கு பின் தான் ரொம்ப பிஷியாக டுவிட்டர் மூலம் வேலை செய்து வருகிறார். இவர் கிரிக்கெட் விளையாடிய நாட்களில், இவர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் முன்னாள் கேப்டன் கங்குலி. அதை சேவக்கே பலமுறை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தவிர, சேவக்கிற்காக டெஸ்ட் போட்டிகளில் தனது ஓபனிங் இடத்தை விட்டுக்கொடுத்தவர் கங்குலி. இந்நிலையில் தனது களத்தில் கங்குலியை வைத்து காமெடி செய்துள்ளார் சேவக். இன்று சேவக் வெளியிட்ட இரண்டு டுவிட்டில், பாண்டா கரடியின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு, அதில், உங்களுக்கு தெரிந்த கண்ணாடி அணிந்த நண்பரின் கண்ணாடிகளை எடுத்து விட்டால், அவர் இப்படி தான் பார்ப்பார் என பதிவிட்டுள்ளார்.
இதை வெளியிட்ட சிறிது நேர கேப்பில், கங்குலியைப்பற்றி இவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், எனக்கு இரண்டு கங்குலியை தெரியும் ஒன்று தாதா கங்குலி, மற்றொன்ரு சீனா கங்குலி, கண்ணை சிமிட்டி சிமிட்டி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வாணவேடிக்கை நிகழ்த்தும் அவரை மறக்கவே முடியாது. என குறிப்பிட்டுள்ளார். ஆனால் கங்குலி இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.