சுவாமி : அருள்மிகு புண்டரிகாட்சபெருமாள்.
அம்பாள் : செண்பகவல்லி, பங்கயச்செல்வி.
தீர்த்தம் : மதிலுக்குள்ளேயே 7 தீர்த்தங்கள் உள்ளன. திவ்யகந்த, கூசிரபுச்கரணிகள், குச, சக்ர, புஷ்கல, பத்ம, வராஹ மணிகர்ணிகா.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
விமானம் : விமலாக்ருதி விமானம்.
தலச்சிறப்பு :
பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இந்த 18 படிகளும், 18 கீதை அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுரவாயிலில் நான்கு வேதங்களாக கருதப்படுகிறது. அதன் பின் பலிப்பீடம் உள்ளது. பலி பீடத்தை சேவித்து ஐந்து படிகளை கடக்க வேண்டும். இந்த 5 படிகளும் பஞ்சபூதங்களாக கொள்ளப்படுகிறது. அதன் பின் நாழிக் கேட்டான் வாசலை அடைய வேண்டும். கருவறைக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி “தட்சிணாயனம்” ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை திறந்திருக்கும்.
இரண்டாவது வழி “உத்தராயணம்” தை மாதம் முதல் ஆனி மாதம் வரை திறந்திருக்கும். நினைத்த நல்ல காரியங்கள் நிறைவேற “பலிபீடு திருமஞ்சனம்” செய்வதாக பிரார்த்தனை செய்து காரிய சித்தியான பின் பலிபீட திருமஞ்சனம் செய்து பெருமாளுக்கு, பலி பீடத்திற்கும் பொங்கல் பிரசாதம் தளிகை அமுது செய்து பிரார்த்தனையை முடிப்பர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தங்களில் தீர்த்தமாடி, பின்னர் பெருமாளுக்கு அமுது செய்து பொங்கலை சாப்பிட்டால் “புத்ரபாக்கியம்” ஏற்படுவது கண்கூடு.
தலவரலாறு :
சிபி சக்ரவர்த்திக்கு ஸ்வேத வராஹனாக (வெள்ளை பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு “ஸ்வேதபுரிநாதன் “ என்ற பெயர் ஏற்பட்டதாக ஸ்தலபுராணம்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் பகல் 1.15 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
திருவிழாக்கள் :
சித்திரை – கோடைதிருநாள், சித்ராபௌர்ணமி கஜேந்திரமோட்சம்,
ஆடி – கேட்டை நட்சத்திரத்தில் ஜேஸ்டாபிஷேகம்,
ஆவணி – ஸ்ரீஜெயந்திவீதியடி புறப்பாடு,
ஐப்பசி – பெருமாள், தாயார் பிரம்மோற்த்சவம்,
கார்த்திகை – திருக்கார்த்திகை புறப்பாடு.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி : அருள்மிகு புண்டரிகாட்ச பெருமாள் திருக்கோவில்,திருவெள்ளரை (அஞ்சல்), மண்ணச்சநல்லூர் (தாலுகா), திருச்சி மாவட்டம்.
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !