• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேர் இல்லாமல் உட்காரும் ஓ.பி.எஸ். பிரச்சாரத்தில் கலாய்க்கும் ஸ்டாலின்.

April 19, 2016 தண்டோரா குழு

சமீப காலமாக பிரச்சாரத்தின் பொது அ.தி.மு.கவினரை ஸ்டாலின் கிண்டலடிப்பது அதிகரித்துள்ளது. எங்குப் பிரச்சாரம் சென்றாலும் அங்கு அ.தி.மு.க அமைச்சர்களைக் கிண்டல் செய்து கைதட்டல் வாங்குகிறார்.

இந்த நிலையில் கரூரில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் ஜெயலலிதா மேடையில் அமர்ந்திருக்கும் பொது வேட்பாளர்கள் தரையில் அமர வைக்கப்படுகிறார்கள் என்றும், ஆனால் தி.மு.க வேட்பாளர்கள் கம்பீரமாக சரிசமமாக அமர்ந்திருக்கிறார்கள் என்றும் கிண்டலடித்தார்.

மேலும் அமைச்சர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் கூனி குறுகி வணக்கம் வைப்பார்கள் அதிலும் ஓ.பி.எஸ் சேரே இல்லாமல் உட்காருவதில் வல்லவர்.

அந்த வித்தையை அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி அவரைப்போலவே கும்பிடு போட்டுக் காட்டி தி.மு.க தொண்டர்களிடம் கைதட்டல் வாங்கினார்.

மேலும் படிக்க