• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

12 வயது சிறுமியை மணந்த 67 வயது தாத்தா. வறுத்தெடுத்த பொதுமக்கள்.

March 25, 2016 வெங்கி சதீஷ்

உலகளவில் குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் லெபனான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டும் இன்னமும் குழந்தை திருமணத்தைத் தடுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்துவதில் மேத்தனப்போக்கே காட்டப்படுகிறது. இந்நிலையில் அங்கு உள்ள முக்கிய சாலையின் ஓரத்தில் சுமார் 67 வயதான ஒருவர் 12 வயதான குழந்தையுடன் திருமண உடையில் நின்றுகொண்டு இருந்தார்.

அதை ஒரு போட்டோகிராபர் வித விதமாகப் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருசிலர் கண்டும் காணாமல் சென்றாலும் பலர் அந்த முதியவரிடம் சென்றும் போட்டோகிராபரிடம் சென்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பெண்ணை பலர் இவர் யார் எனக் கேட்டபோது இவர் எனது கணவர் எனக் கூறினார். அதற்கு பெண்கள் பலர் யாருக்கும் பயப்படாதே கட்டாயப்படுத்தினால் என்னிடம் சொல் நான் பார்த்துக்கொள்கிறேன் எனத் தைரியம் கூறினர். பின்னர் அந்த இடமே ஒரு சந்தை கடைபோல் கூட்டம் கூடி வயதானவரைத் திட்டி தீர்த்தனர்.

பின்னர் தான் தெரிந்தது அது ஒரு தொண்டு நிறுவனத்தால் விழிப்புணர்விற்காக நடத்தப்பட்ட நாடகம் எனத் தெரியவந்தது. இது குறித்து அவர்கள் கூறும்போது, நாட்டில் குழந்தை திருமணத்தைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற நாடகம் நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தனர். ஆனாலும் தற்போது முதலில் இருந்ததை விட விழிப்புணர்வு அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தனர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலும் படிக்க